Monday, 13 February 2017

TN 6th to 10th Text Books || Pallikalvi

சமச்சீர் புத்தகம் ஏழாம் வகுப்பு || TN 6th to 10th Text Books || Pallikalvi


சமச்சீர் புத்தகம் ஏழாம் வகுப்பு || TN 6th to 10th Text Books || Pallikalvi
1.வாழ்த்து

·         ‘பண்ணினை’ – எனத்துவங்கும் பாடலை இயற்றியவர் – திரு.வி.க .
·         போற்றி – வாழ்த்துகிறேன் .
·         ஊர் – காஞ்சிபுரம் (மா) , துள்ளம் (தற்போது தண்டலம்)
·         தொழிலாளர் நலத்திற்கும் , பெண்கள் முன்னேற்த்திற்கும் பாடுபட்டவர் – திரு.வி.க .
·         பெற்றோர் – விருத்தாசலனார் , சின்னம்மையார் .
·         காலம் – 26.08.1883 – 17.09-1953
·         நூல்கள் –
1.   பெண்ணின் பெருமை
2.   மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்
3.   தமிழ்த்தென்றல்
4.   உரிமை வேட்கை
5.   முருகன் அல்லது அழகு
6.   பொதுமை வேட்டல்
7.   நாயன்மார் வரலாறு
·         பொதுமை வேட்டல் – மொத்த தலைப்பு – 44 (முதல் தலைப்பு – தெய்யவநிச்சயம் , இறுதி தலைப்பு - போற்றி) , பாடல்கள் – 340.
·         திரு.வி.க. பணிபுரிந்த பள்ளி – வெஸ்லி பள்ளி , ராயப்பேட்டை , சென்னை .

3.செம்மொழித்தமிழ்


·         ‘எளிதில் பேசவும் , பாடல்கள் இயற்றவும் இயற்கையாக அமைந்துள்ளது , தென்மொழியாகிய தமிழ் ஒன்றே’ – என்றவர் – வள்ளலார் .
·         ‘தமிழ்மொழி அழகான சித்திர வேலைபாடமைந்த வெள்ளித்தட்டு . அதில் வைக்கப்பட்டிருக்கும் தங்க ஆப்பிள் திருக்குறள் . தமிழ் என்னை ஈர்த்தது . திருக்குறள் என்னை இழுத்தது ’ – என்றவர் – டாக்டர் கிரௌவல் .
·         ‘உலகின் மிகப்பழமையான நிலப்பகுதியான குமரிக்கண்டத்திலிருந்து தமிழ் தோன்றியது’ – எனக்கூறும் நூல் – தண்டியலங்காரம் .


·         ‘தமிழ் , பிறமொழித்துணையில்லாமல் தனித்து இயங்கவல்லது மற்றும் தழைத்தோங்க வல்லது ’ என்றவர் – கால்டுவெல் .
·         ‘எல்லாச்சொற்களும் பொருள் குறித்தனவே’ எனக்கூறும் நூல் – தொல்காப்பியம் .
·         தமிழ் மெல்லோசை உடைய மொழி
·         தமிழில் இடுகுறிப்பெயர்கள் குறைவு
·         ‘கலிப்பா’ வேறுமொழியில் இல்லை
·         அம்மை , அப்பன் என்று வழங்கிய நாடு – குமரி நாடு .

4.ஊரும் பேரும்

·         ‘ஊர்’ எனும் பெயரில் நகரமும் , ‘ஊர் நம்மு’ எனும் பெயரில் ஊரும் உள்ள நாடு – பாபிலோன் .
·         அத்தி மரங்கள் சூழ்ந்த ஊர் – ஆர்க்காடு (ஆர் - அத்தி)
·         முல்லை நில ஊர் – காட்டூர்
·         குறிஞ்சி நில ஊர் – மலையூர் .
·         மருத நில ஊர் – மருதூர் .
·         நெய்தல் நில ஊர் – கடலூர் .
·         தென்னைமரம் சூழ்ந்த ஊர் – தெங்கூர் .
·         தெற்கே அமைந்த ஊர் – தென்பழஞ்சி , வடக்கே அமைந்த ஊர் – வடபழஞ்சி .
·         நாயக்கர்கள் , தமிழகத்தை 72 பாளையங்களாக பிரித்து ஆண்டனர் .
·         12 வயதிலேயே , மற்போர் , சிலம்பு எனகற்று , புலியை வீழ்த்தியவர் – புலித்தேவன் .

7.புறநானூறு


·         ‘நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே’ எனப்பாடியவர் – மோசிக்கீரனார் .
·         புறம் என்றால் – மரஞ்செய்தலும் அரஞ்செய்தலும் .
·         மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை .
·         தானை – படை , கீரன் – குடிப்பெயர் .

8.முதுமொழிக்காஞ்சி

·         ஆசிரியர் – கூடலூர்க்கிழார் .(ஐங்குறுநூறைத்தொகுத்தவர்)
·         இந்நூலின் வேறுபெயர் – அறவுரைக்கோவை
·         ‘சிறந்த பத்தை தன்னகத்தே கொண்ட நூலின் பெயர்’ – முதுமொழிக்காஞ்சி .
·         இந்நூல் காஞ்சித்திணையில் ஒன்று . 10 அதிகாரம் மற்றும் 100 பாடல்களை கொண்டது .
·         ‘உலக உண்மைகளைத் தெளிவாக எடுத்தியம்பும் நூல்’ – முதுமொழிக்காஞ்சி .
·         ஆர்கலி – நிறைந்த ஓசையை உடைய கடல் . பேதை –அறிவுநுட்பம் .

·         ‘தமிழ்ப்படித்தால் அறம்பெருகும்’ என்றவர் -  பெருஞ்சித்திரனார் 
9.மீனாட்சி சுந்தரனார்

·         பிறந்த ஊர் – திரிசுரபுரம் (திருச்சி) அருகே எண்ணெய் கிராமம் .
·         ஆண்டு – 06.04.1815 – 01.02.1876
·         பெற்றோர் – சிதம்பரம் , அன்னத்தாச்சியார் .
·         இவரின் மாணவர்கள் – குலாம் காதர் நாவலர் , சாமிநாதன் , சவரிராயலு , தியாகராசர் .
·         தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர் – மீனாட்சி சுந்தரனார் .
·         இவர் சிலகாலம் திருவாவடுதுறை ஆதினமாக பணியாற்றினார் .
·         ‘நோய்க்கு மருந்து இலக்கியம் என்றவர் ’ – மீனாட்சி சுந்தரனார் .


10.கோவூர்க்கிழார்

·         பிறந்த ஊர் – உறையூர் (நலங்கிள்ளியின் தலைநகரம்)
·         இவர் , நலங்கிள்ளியின் அவைத்தலைவர் .
·         குளமுற்றத்துஞ்சிய கிள்ளிவளவனின் தலைநகரம் – புகார் .
·         சோழனின் மாலை – அத்தி , பாண்டியனின் மாலை – வேப்பம்பூ , சேரனின் மாலை – பனம்பூ .
·         மலையமான் திருமுடிக்காரியின் பிள்ளைகளை , கிள்ளிவளவனிடமிருந்து காப்பாற்றியவர் – கோவூர்க்கிழார் .
·         ‘இளந்தத்தனார் எனும் புலவரை மீட்டச்செம்மல்’ – கோவூர்க்கிழார் .
·         ‘குறள்நெறிக்கதைகளின்  ஆசிரியர்’ – கே.சுந்தராஜன் .



11.உயிர்மெய் , ஆய்தம்

·         ஆய்த எழுத்தின் வேறுபெயர்கள் – அஃகேனம் , முற்றுப்புள்ளி , முப்பாற்புள்ளி , தனிநிலை .
·         ‘பாடிவீடுகள்’ என்பவை , போரின்போது புறப்பட்ட படையினர் , தங்கி இளைப்பாற .
·         என்றும் புகழ் சேர்ப்பது – புலனடக்கம் . அமரருள் உய்ப்பது – அடக்கம் .

12.திரிகடுகம்


·         ஆசிரியர் – நல்லாதனார்
·         ஊர் – திருநெல்வேலி மாவட்டம் திருத்து எனும் கிராமம் .
·         ‘பால் பற்றி சார்பு’ என்பதன் பொருள் – ஒரு பக்க சார்பு
·         தூஉயம் – தூய்மை உடையோர் , தூனு – புதர் .
·         ‘தான் வழங்கும் நாட்டில் பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றி தனித்து இயங்கவல்ல மொழியே தனிமொழி’ – என்று கூறியவர் – பரிதிமாற்கலைஞர் .
·         ‘திருந்திய பண்பும் , சீர்த்த நாகரிகமும் , பொருந்திய தூயமொழியே செம்மொழி’ என்றவர் – பரிதிமாற்கலைஞர் .

சமச்சீர் புத்தகம் ஏழாம் வகுப்பு || TN 6th to 10th Text Books || Pallikalvi


13.கணிதமேதை ராமானுஜம்


·         பிறந்த ஊர் – ஈரோடு
·         காலம் – 22.12.1887 – 26.04.1920
·         பெற்றோர் – சீனிவாசன் , கோமளம்
·         1880-ல் லண்டனில் 15 வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கியவர் – கார் .
·         ‘தன் கணித தேற்றங்களை , யார்மூலம் கேள்விகளாக தொகுத்து , இந்திய கணித கழக பத்திரிக்கைக்கு ராமானுஜர் அனுப்பினார் ?’ – பிரான்சிஸ் ஸ்ப்ரிங் .
·         ராமானுஜரின் கட்டுரைகள் ‘பெர்னௌலிஸ் எண்கள்’ என்ற தலைப்பில் வெளியானது .
·         ராமானுஜர் மேற்கல்வி பெற , உதவிக்கு கடிதம் அனுப்பியது ஹார்டி என்பவருக்கு .  இதற்கு ராமானுஜத்திற்கு உதவியவர் – E.H. நெவில் .
·         ராமானுஜர் இங்கிலாந்து புறப்பட்ட தேதி – 17.03.1914
·         ‘ஆய்லராக இல்லாவிட்டாலும் , ராமானுஜர் குறைந்த பட்சம் ஒரு ஜகோபி’ என்றவர் – லிட்டில்வுட் . (ஆய்லர் – சுவிஸ் நாட்டு கணித மேதை . ஜகோபி – ஜெர்மன் நாட்டு கணிதமேதை )
·         ‘கணிதத்திறமையால் , விஞ்ஞான உலகை பிரமிக்கச்செய்து , வரலாற்றில் ஒரு குறிப்பிடத்த்கக இடத்தைப்பெற்ற ஒரு பிறவிக்கணிதமேதை ராமானுஜர்’ என்றவர் – இந்திராகாந்தி
·         ‘ராமானுஜர் ஒரு முதல் தர கணிதமேதை ’ என்றவர் – ஆளுநர் லார்ட் மென்ட் .
·         ’20-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை ராமானுஜர்’ என்றவர் – சூலியன் .

ஹார்டி மற்றும் லிட்டில்வுட்

·         கணித இரட்டை மாமேதைகள் என்றழைக்கப்படுபவர்கள் – ஹார்டி , லிட்டில்வுட் .
·         ‘ரோசர்ஸ் ராமானுஜன் கண்டுபிடிப்புகள்’ என்ற நூலை வெளியிட்டவர் – ஹார்டி .
·          “இறைவன் தந்த பரிசு ராமானுஜர்” என்றவர் – E.T.பெல் .
·         ராமானுஜர் இங்கிலாந்தில் பெற்ற பட்டம் FRS . ஆண்டு 1918 .
·         ராமானுஜரின் வெண்கலச்சிலையை இந்தியாவிற்கு அளித்தவர்கள் – ரிச்சர்ட் , ஆஸ்கே (அமெரிக்கா) , 1984 .
·         ராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் உள்ள இடம் – சென்னை .

15.நால்வகைச்சொற்கள்

·         தனியாக வராமல் , பெயர் மற்றும் வினைச்சொற்களை சார்ந்து வரும்  சொற்கள் – இடைச்சொல் .
·         செய்யுளுக்கே உரிமை பெற்று வரும் சொற்கள் – உரிச்சொல் .

16.இரட்டுற மொழிதல்

·         ஆசிரியர் – காளமேகப்புலவர்
·         இயற்பெயர் – வரதன்
·         ஊர் – கும்பகோணம் (அ) விழுப்புரம் என்ற கருத்து நிலவுகிறது .
·         இவர் வைணவத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியவர் .
·         திருவரங்க மடப்பள்ளியில் சிறிதுகாலம் வேலைப்பார்த்தவர் .
·         ஆடுபரி – ஆடுகின்ற குதிரை ,
·         பரிவாய் – அன்பாய் , குதிரையின் வாய்
·         துன்னலர் – பகைவர் , அழகிய மலர்
·         ‘தனிப்பாடல் திரட்டை தொகுத்தவர்’ – சந்திரசேகர கவிதாசப்பண்டிதர் . தொகுப்பித்தவர் – ராமநாதபுரம் பொன்னுசாமி .
·         ‘கற்றது கைம்மண்ணளவு , கல்லாதது உலகளவு’ என்று பாடியவர் – ஔவை .

17.காந்தியடிகள் கடிதம்

·         இக்கடிதம் , 1917 ல் குஜராத்தில் புரோச் எனும் நகரில் நடந்த , இரண்டாம் கல்வி மாநாட்டில் காந்தியடிகள் பேசியதைத் தழுவி , பாடபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது .

18.சிந்தனைச்செல்வம்

·         ஆசிரியர் – திருமுருக கிருபானந்த வாரியார் .

19.இடுகுறி , காரணப்பெயர்கள்
·         தமிழில் மிகுதியாக உள்ள பெயர்கள் – காரணப்பெயர்கள்
·         மரங்கொத்தி – காரண சிறப்புப்பெயர்

20.திருவாரூர் நாண்மணிமாலை

·         ஆசிரியர் – குமர குருபர்
·         பெற்றோர் – சண்முகசிகாமணி கவிராயர் , சிவகாமசுந்தரி .
·         வேறுநூல்கள் – நீதிநெறிவிளக்கம் , மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழ் , கந்தர் கலிவெண்பா , முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் , மதுரைக்கலம்பகம் ,
·         காலம் – 17ம் நூற்றாண்டு .
·         திருவாரூர் நாண்மணிமாலையில் உள்ள மொத்த பாடல்கள் – 40 .
·         நாண்மணிமாலை – முத்து,பவளம், மரகதம்,மாணிக்கம் .
·         அதேபோல் இந்நூலில் உள்ள நால்வகைப்பா – வெண்பா , ஆசிரியப்பா, கட்டளை கலித்துறை, ஆசிரியவிருத்தம் .
·         தென்மலை – தெற்கிலுள்ள திருவாரூர் , பூங்கோயில் – திருவாரூர்க்கோவில் .

21.மெய்ப்பொருள் கல்வி


·         ஆசிரியர் – வாணிதாசன்
·         இயற்பெயர் – எத்திராசலு (அ) அரங்கசாமி .
·         பெற்றோர் – திருக்காமு , துளசியம்மாள்
·         சிறப்புப்பெயர் – கவிஞரேறு , பாவலர்மணி , தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த்
·         ஊர் – புதுவையை அடுத்த வில்லியனூர் .
·         காலம் – 22.07.1915 - 07.08.1974
·         மெய்ப்பொருள் கல்வி என்பது , இவரின் குழந்தை இலக்கியம் என்ற நூலில் வரும் ஒரு பாடல் ஆகும் .

22.தூங்கா நகர்


·         தூங்கா நகரம் எனப்படுவது – மதுரை
·         தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய நகரம் - மதுரை
·         தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றழைக்கப்படும் நகரம்  - மதுரை
·         ‘தமிழ்க்கெழு கூடல்’ என்று புறநானூறு பாராட்டிய நகரம் – மதுரை
·         ‘தாங்கரு மரபின் மகிழ்நனை மதுரை ’ என்ற நூல் – சிறுபாணாற்றுப்படை
·         ‘ஆலவாய் என்பது மதுரை’ என்ற நூல் – திருவிளையாடற்புராணம்
·         மதுரையில் ஆடைகள் விற்கும் பகுதி – அறுவை வீதி
·         தானியக்கடை பகுதி – கூலவீதி
·         பொற்கதைகள் இருக்கும் வீதி – பொற்வீதி
·         மன்னர்கள் வாழும் வீதி – மன்னவர் வீதி
·         அந்தணர்கள் வாழும் வீதி – மறையவர் வீதி
·         ‘சேரநாடு வேழமுடைத்து , சோழநாடு சோறுடைத்து , பாண்டிய நாடு முத்துடைத்து , தொண்டை நாடு – சான்றோர் உடைத்து ‘ என்பது பழமொழி .
·         அரிமர்த்தணப்பாண்டியனிடம் அமைச்சராய் பணியாற்றியவர் – மாணிக்கவாசகர்
·         குமரகுருபரர்க்கு , மீனாட்சியம்மையே சிறுபிள்ளையாக வந்து , முத்தமணிமாலை பரிசளித்தது , மதுரையில் .
·         மதுரையில் 4-வது தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர் – பாண்டித்துரை
·         திருஞானசம்பந்தர்  , கூன்பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர் .
·         மீனாட்சி கோவிலின் பழமையான கோபுரம் – கிழக்குக்கோபுரம்
·         மீ.கோவில் கோபுரங்களில் உயரமானது – தெற்கு கோபுரம் (160.9 அடி , 1511 சுதை உருவம் உள்ளது )
·         மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது – நாயக்கர் மஹால் (தூண்கள் 82 அடி உயரம் , 19 அடி சுற்றளவு)


24.கண்ணதாசன்
·         ஊர் – சிறுகூடல் பட்டி
·         காலம் – 1927 – 1981
·         இயற்பெயர் – முத்தையா
·         வேறுபெயர் – காரைமுத்துப்புலவர் , வணங்காமுடி , பார்வதிநாதன் , ஆரோக்கியநாதன் , கமகப்பிரியா

25. ஏர்முனை


·         ‘ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமில்லை ’ எனப்பாடியவர் -  மருதகாசி
·         திரைக்கவித்திலகம் என அழைக்கபடுபவர் –மருதகாசி
·         ஊர் – திருச்சி யில் உள்ள மேலகுடிக்காடு
·         பெற்றோர் – அய்யம்பெருமாள் , மிளகாயி அம்மாள் .
·         முட்டு என்பதன் பொருள் – குவியல்
·         இவரின் காலம் – 13.02.1920 – 29.11.1989

26.பொங்கல் வழிபாடு


·         ஆசிரியர் – ந பிச்சமூர்த்தி .
·         இயற்பெயர் – ந. வேங்கடலிங்கம்
·         ஊர் – கும்பகோணம் , தஞ்சை  .
·         காலம் – 15.08.1900 – 04.12.1976
·         இவர் வழக்குரைஞராக பணியாற்றிய காலம் – 1924 -1938 (14 ஆண்டுகள்)
·         கோவில் நிர்வாக அலுவலராய் இருந்த காலம் – 1938 -1954 (16 ஆண்டுகள்)
·         கனகம் – பொன் , நிவேதனம் – படையமுது , கடுகி – விரைந்து .
·         ‘பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவர்’ – ந.பிச்சமூர்த்தி .

27. நெசவு
·         ‘பூக்களில் சிறந்த பூ , பருத்திப்பூ’ என்றவர் – திரு.வி.க
·         பாவுநூல் , ஊடைநூல் இணைந்து உருவாகும் ஆடை – கலிங்கம்
·         திருப்பூர் – பின்னலாடை
·         மதுரை – சுங்குடிப்புடவை
·         உறையூர் – கண்டங்கி
·         காஞ்சி – பட்டு
·         சென்னிமலை – போர்வை 
சமச்சீர் புத்தகம்  ஏழாம் வகுப்பு || TN 6th to 10th Text Books || Pallikalvi

28.தமிழக முன்னோடிகள்

·         கண் , காது , மனம் ,இம்மூன்றிற்கும் இன்பம் பயக்கும் கலை – நாடகக்கலை
·         நாடக இலக்கண நூல்கள்
1.   சயிந்தம்
2.   செயிற்றியம்
3.   முறுவல்
4.   மதிவாணன் நாடகக்கலை


·         பரிதிமாற் கலைஞர் காலம் – 1870 – 1903
·         ‘தமிழகம்  உரிமை இழந்து , ஆங்கில மோகத்தில் ஆழ்ந்திருந்த காலத்தில் அருந்தமிழைப் போற்றி வளர்த்தவர் ’ – பரிதிமாற்கலைஞர் .
·         பரிதிமாற்கலைஞரின் நாடகங்கள்
1.   ரூபாவதி
2.   கலாவதி
3.   மானவிஜயம் (களவழி நாற்பது எனும் நூலை தழுவி எழுதப்பட்ட நாடகம்)
·         செம்மாந்த சீரிய செந்தமிழ்நடையில் நாடகம் இயற்றியவர் – பரிதிமாற்கலைஞர் .
·         வடமொழி , மேனாட்டு நாடகமரபுகளை , தமிழ்நாடகத்தோடு இணைந்து எழுதப்பட்ட நாடக இலக்கண நூல் – நாடகவியல் (எழுதியவர் – பரிதிமாற் கலைஞர்)



·         சங்கரதாசு சுவாமிகள் காலம் – 1867 – 1920

·         பாமர மக்களுக்குத்தெரிந்த பழங்கதைகளை நாடகமாக்கியவர் – சங்கரதாசு சுவாமிகள்

·         சிறுவர்களை வைத்து நாடகக்குழுவை தோற்றுவித்தவர் – சங்கரதாசு

·         சங்கரதாசுவின் நாடகங்கள்

1.   வள்ளித்திருமணம்
2.   கோவலன் சரித்தரம்
3.   சதிசுலோசனா
4.   இலவகுசா
5.   அபிமன்யூ
6.   சுந்தரி
7.   பக்த பிரகலாதா
8.   சதிஅனுசுயா
9.   பவளக்கொடி
10. நல்லதாங்காள்  (இவை உட்பட , மொத்தம் 40 நாடகங்கள்)
·         ‘துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் சுவை சொட்டும் சந்தர்யம் தோய்ந்திருக்கும்’ என்றவர் – புத்தனேரி சுப்ரமணியம் .

·         பம்மல் சம்பந்தனார் வாழ்ந்த காலம் – 1875 – 1964
·         மாபாவி (மா – அலைமகள் , பா – கலைமகள் , வி - மலைமகள்)
·         1891-ல் , தம் 18-வது வயதில் பம்மல் சம்பந்தனார் துவங்கிய சபை – சுகுணவிலாச சபை .
·         ‘நடிகர்களால் கலைஞர்’ என மதிக்கப்பட்டவர் – பம்மல் சம்பந்தனார் .
·         ‘கட்டுக்குழையாத நாடகக்குழுவை வெற்றிகரமாக நடத்தியவர்’ – பம்மல்
·         பம்மல் எழுதிய நாடகங்கள் – 94
1.   மனோகரா
2.   யயாதி
3.   சிறுதொண்டன்
4.   கர்ணன்
5.   சபாபதி
6.   பொன்விலங்கு

·         ‘கேளிக்கை நாடகம் மூலம் ,நாடக நையாண்டியையும் தமிழ்நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ’ – பம்மல் .
·         ஷேக்ஸ்பியரின் நாடகங்களை தமிழில் தழுவி எழுதியவர் – பம்மல் (வாணிபுரத்து வாணிகன் , விரும்பியவிதமே , அமலாதித்யன்)
·         ‘சூதினும் சூதானது யாதெனின் சூதினும் சூதே சூதானது’ என்ற குரளை எழுதியவர் – பம்மல் .
·         தமிழ்நாடக பேராசிரியர் –பரிதிமாற்கலைஞர்
·         தமிழ்நாடகத்தலைமை ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள்
·         தமிழ்நாடக உலகின் இமயமலை – சங்கரதாசு சுவாமிகள்
·         தமிழ்நாடகத்தந்தை – பம்மல் சம்பந்தனார் .

மரபுச்சொற்கள்

1.   தாவரங்கள்
·         பிஞ்சு – அவரை , முருங்கை , கத்தரி , வெள்ளரி , கொய்யா,
·         மூசு – பலா மூசு , தென்னங்குப்பை , மாவடு

2.   விலங்குளின் இளமைப்பெயர்கள்
·         குருவிக்குஞ்சு , கோழிக்குஞ்சு , எலிக்குஞ்சு
·         ஆட்டுக்குட்டி,நாய்க்குட்டி , கழுதைக்குட்டி, பன்றிக்குட்டி , குதிரைக்குட்டி, பூனைக்குட்டி
·         மான் கன்று , யானைக்கன்று , எருமைக்கன்று ,
·         சிங்கக்குருளை , புலிப்பறழ் , கீரிப்பிள்ளை , அணில்பிள்ளை .

3.   ஒலிமரபு சொற்கள்
·         சேவல் – கூவும்
·         காகம் – கரையும்
·         கூகை – குழறும்
·         கிளி – கொஞ்சும்
·         வானம்பாடி- பாடும்
·         ஆந்தை – அலறும்
·         கோழி – கொக்கரிக்கும்
·         குதிரை – கணைக்கும்
·         சிங்கம் – முழங்கும்
·         பன்றி - உருமும்
·         யானை- பிளிறும்
·         நரி – ஊளையிடும்

31. முக்கூடற் பள்ளு
·         மதோன் மத்தர் என்பதன் பொருள் – பெரும்பித்தனாகிய சிவன் .
·         முக்கூடல் எனும் ஊரின் வேறுபெயர் – ஆளூர் வடகரைநாடு
·         முக்கூடலில் கூடும் ஆறுகள் -  தன்பொருனை, சிற்றாறு , கோதண்டராம ஆறு .
·         தென்பால் இருக்கும் நாடு – தென்பால் சீவலமங்கைத் தென்கரை நாடு
·         முக்கூடற்பள்ளை எழுதியவர் -  எண்ணயினாப்புலவர்
·         நவரத்தினம்
1.   முத்து
2.   பவளம்
3.   மரகதம்
4.   வைடூரியம்
5.   மாணிக்கம்
6.   புட்பராகம்
7.   ரத்தினம்
8.   வைரம்
9.   கோமேதகம்

32. இயற்கை வேளாண்மை
·         நில இடைவெளிகள்
1.   நெல் – நண்டோட
2.   கரும்பு – ஏரோட
3.   வாழை – வண்டியோட
4.   தென்னை – தேரோட

·         பஞ்சகவ்வியம் – கோமேயம் , சாணம் , பால் , தயிர் , நெய் .
·         வேளாண்பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் – கோவை
·         வேளாண் தொழிற்கூறுகள் – 6

34. வேற்றுமை அடைமொழி

·         முதல் வேற்றுமை – எழுவாய் வேற்றுமை , 8-ம் வேற்றுமை – விளி வேற்றுமை .
·         இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ
·         மூன்றாம் வேற்றுமை உருபு – ஆல் ,ஆன் , ஒடு, ஓடு, உடன்
·         நான்காம் வேற்றுமை உருபு – கு
·         ஐந்தாம் வேற்றுமை உருபு – இல் , இன்
·         ஆறாம் வேற்றுமை உருபு – அது
·         ஏழாம் வேற்றுமை உருபு – கன் , மேல் , கீழ் , உள்
·         தமிழ்ப்பாடநூல் என்பது இனமுள்ள அடைமொழி
·         வெண்ணிலவு ,செஞ்ஞாயிறு , உப்பளம் – இனமில்லா இடைமொழி

35. தனிப்பாடல்

·         ஆசிரியர் –அந்தக்கவி வீரராகவர்
·         சீட்டுக்கவி மற்றும் நகைச்சுவையாய் பாடுவதில் வல்லவர் .
·         இவரின் வேறு நூல்கள் –
1.   சந்திரவாணன் கோவை
2.   சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
3.   சேயூர் கலம்பகம்
4.   திருக்கழுகுன்ற புராணம்
·         இவரின் பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் , தொகுக்கப்பட்டுள்ளன .
·         தனிப்பாடல் திரட்டில் இருக்கும் பாடல்களின் எண்ணிக்கை – 1113  , பாடியவர்கள் -110 .
·         யானையைக்குறிக்கும் வேறுபெயர்கள்
1.   களபம் (சந்தனம்)
2.   மாதங்கம் (பெருந்தங்கம்)
3.   வேழம் (பொன்)
4.   பகடு (எருது)
5.   கம்பம்மா (கம்புமாவு)
சமச்சீர் புத்தகம்  ஏழாம் வகுப்பு || TN 6th to 10th Text Books || Pallikalvi

No comments:

Post a Comment