சமச்சீர் புத்தகம் ஏழாம் வகுப்பு || TN 6th to 10th Text Books || Pallikalvi
சமச்சீர் புத்தகம் ஏழாம் வகுப்பு || TN 6th to 10th Text Books || Pallikalvi
1.வாழ்த்து
· ‘பண்ணினை’ – எனத்துவங்கும் பாடலை இயற்றியவர் – திரு.வி.க .
· போற்றி – வாழ்த்துகிறேன் .
· ஊர் – காஞ்சிபுரம் (மா) , துள்ளம் (தற்போது தண்டலம்)
· தொழிலாளர் நலத்திற்கும் , பெண்கள் முன்னேற்த்திற்கும் பாடுபட்டவர் – திரு.வி.க .
· பெற்றோர் – விருத்தாசலனார் , சின்னம்மையார் .
· காலம் – 26.08.1883 – 17.09-1953
· நூல்கள் –
1. பெண்ணின் பெருமை
2. மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்
3. தமிழ்த்தென்றல்
4. உரிமை வேட்கை
5. முருகன் அல்லது அழகு
6. பொதுமை வேட்டல்
7. நாயன்மார் வரலாறு
· பொதுமை வேட்டல் – மொத்த தலைப்பு – 44 (முதல் தலைப்பு – தெய்யவநிச்சயம் , இறுதி தலைப்பு - போற்றி) , பாடல்கள் – 340.
· திரு.வி.க. பணிபுரிந்த பள்ளி – வெஸ்லி பள்ளி , ராயப்பேட்டை , சென்னை .
3.செம்மொழித்தமிழ்
· ‘எளிதில் பேசவும் , பாடல்கள் இயற்றவும் இயற்கையாக அமைந்துள்ளது , தென்மொழியாகிய தமிழ் ஒன்றே’ – என்றவர் – வள்ளலார் .
· ‘தமிழ்மொழி அழகான சித்திர வேலைபாடமைந்த வெள்ளித்தட்டு . அதில் வைக்கப்பட்டிருக்கும் தங்க ஆப்பிள் திருக்குறள் . தமிழ் என்னை ஈர்த்தது . திருக்குறள் என்னை இழுத்தது ’ – என்றவர் – டாக்டர் கிரௌவல் .
· ‘உலகின் மிகப்பழமையான நிலப்பகுதியான குமரிக்கண்டத்திலிருந்து தமிழ் தோன்றியது’ – எனக்கூறும் நூல் – தண்டியலங்காரம் .
· ‘தமிழ் , பிறமொழித்துணையில்லாமல் தனித்து இயங்கவல்லது மற்றும் தழைத்தோங்க வல்லது ’ என்றவர் – கால்டுவெல் .
· ‘எல்லாச்சொற்களும் பொருள் குறித்தனவே’ எனக்கூறும் நூல் – தொல்காப்பியம் .
· தமிழ் மெல்லோசை உடைய மொழி
· தமிழில் இடுகுறிப்பெயர்கள் குறைவு
· ‘கலிப்பா’ வேறுமொழியில் இல்லை
· அம்மை , அப்பன் என்று வழங்கிய நாடு – குமரி நாடு .
4.ஊரும் பேரும்
· ‘ஊர்’ எனும் பெயரில் நகரமும் , ‘ஊர் நம்மு’ எனும் பெயரில் ஊரும் உள்ள நாடு – பாபிலோன் .
· அத்தி மரங்கள் சூழ்ந்த ஊர் – ஆர்க்காடு (ஆர் - அத்தி)
· முல்லை நில ஊர் – காட்டூர்
· குறிஞ்சி நில ஊர் – மலையூர் .
· மருத நில ஊர் – மருதூர் .
· நெய்தல் நில ஊர் – கடலூர் .
· தென்னைமரம் சூழ்ந்த ஊர் – தெங்கூர் .
· தெற்கே அமைந்த ஊர் – தென்பழஞ்சி , வடக்கே அமைந்த ஊர் – வடபழஞ்சி .
· நாயக்கர்கள் , தமிழகத்தை 72 பாளையங்களாக பிரித்து ஆண்டனர் .
· 12 வயதிலேயே , மற்போர் , சிலம்பு எனகற்று , புலியை வீழ்த்தியவர் – புலித்தேவன் .
7.புறநானூறு
· ‘நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே’ எனப்பாடியவர் – மோசிக்கீரனார் .
· புறம் என்றால் – மரஞ்செய்தலும் அரஞ்செய்தலும் .
· மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை .
· தானை – படை , கீரன் – குடிப்பெயர் .
8.முதுமொழிக்காஞ்சி
· ஆசிரியர் – கூடலூர்க்கிழார் .(ஐங்குறுநூறைத்தொகுத்தவர்)
· இந்நூலின் வேறுபெயர் – அறவுரைக்கோவை
· ‘சிறந்த பத்தை தன்னகத்தே கொண்ட நூலின் பெயர்’ – முதுமொழிக்காஞ்சி .
· இந்நூல் காஞ்சித்திணையில் ஒன்று . 10 அதிகாரம் மற்றும் 100 பாடல்களை கொண்டது .
· ‘உலக உண்மைகளைத் தெளிவாக எடுத்தியம்பும் நூல்’ – முதுமொழிக்காஞ்சி .
· ஆர்கலி – நிறைந்த ஓசையை உடைய கடல் . பேதை –அறிவுநுட்பம் .
· ‘தமிழ்ப்படித்தால் அறம்பெருகும்’ என்றவர் - பெருஞ்சித்திரனார்
9.மீனாட்சி சுந்தரனார்
· பிறந்த ஊர் – திரிசுரபுரம் (திருச்சி) அருகே எண்ணெய் கிராமம் .
· ஆண்டு – 06.04.1815 – 01.02.1876
· பெற்றோர் – சிதம்பரம் , அன்னத்தாச்சியார் .
· இவரின் மாணவர்கள் – குலாம் காதர் நாவலர் , சாமிநாதன் , சவரிராயலு , தியாகராசர் .
· தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர் – மீனாட்சி சுந்தரனார் .
· இவர் சிலகாலம் திருவாவடுதுறை ஆதினமாக பணியாற்றினார் .
· ‘நோய்க்கு மருந்து இலக்கியம் என்றவர் ’ – மீனாட்சி சுந்தரனார் .
10.கோவூர்க்கிழார்
· பிறந்த ஊர் – உறையூர் (நலங்கிள்ளியின் தலைநகரம்)
· இவர் , நலங்கிள்ளியின் அவைத்தலைவர் .
· குளமுற்றத்துஞ்சிய கிள்ளிவளவனின் தலைநகரம் – புகார் .
· சோழனின் மாலை – அத்தி , பாண்டியனின் மாலை – வேப்பம்பூ , சேரனின் மாலை – பனம்பூ .
· மலையமான் திருமுடிக்காரியின் பிள்ளைகளை , கிள்ளிவளவனிடமிருந்து காப்பாற்றியவர் – கோவூர்க்கிழார் .
· ‘இளந்தத்தனார் எனும் புலவரை மீட்டச்செம்மல்’ – கோவூர்க்கிழார் .
· ‘குறள்நெறிக்கதைகளின் ஆசிரியர்’ – கே.சுந்தராஜன் .
11.உயிர்மெய் , ஆய்தம்
· ஆய்த எழுத்தின் வேறுபெயர்கள் – அஃகேனம் , முற்றுப்புள்ளி , முப்பாற்புள்ளி , தனிநிலை .
· ‘பாடிவீடுகள்’ என்பவை , போரின்போது புறப்பட்ட படையினர் , தங்கி இளைப்பாற .
· என்றும் புகழ் சேர்ப்பது – புலனடக்கம் . அமரருள் உய்ப்பது – அடக்கம் .
12.திரிகடுகம்
· ஆசிரியர் – நல்லாதனார்
· ஊர் – திருநெல்வேலி மாவட்டம் திருத்து எனும் கிராமம் .
· ‘பால் பற்றி சார்பு’ என்பதன் பொருள் – ஒரு பக்க சார்பு
· தூஉயம் – தூய்மை உடையோர் , தூனு – புதர் .
· ‘தான் வழங்கும் நாட்டில் பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றி தனித்து இயங்கவல்ல மொழியே தனிமொழி’ – என்று கூறியவர் – பரிதிமாற்கலைஞர் .
· ‘திருந்திய பண்பும் , சீர்த்த நாகரிகமும் , பொருந்திய தூயமொழியே செம்மொழி’ என்றவர் – பரிதிமாற்கலைஞர் .
சமச்சீர் புத்தகம் ஏழாம் வகுப்பு || TN 6th to 10th Text Books || Pallikalvi
13.கணிதமேதை ராமானுஜம்
· பிறந்த ஊர் – ஈரோடு
· காலம் – 22.12.1887 – 26.04.1920
· பெற்றோர் – சீனிவாசன் , கோமளம்
· 1880-ல் லண்டனில் 15 வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கியவர் – கார் .
· ‘தன் கணித தேற்றங்களை , யார்மூலம் கேள்விகளாக தொகுத்து , இந்திய கணித கழக பத்திரிக்கைக்கு ராமானுஜர் அனுப்பினார் ?’ – பிரான்சிஸ் ஸ்ப்ரிங் .
· ராமானுஜரின் கட்டுரைகள் ‘பெர்னௌலிஸ் எண்கள்’ என்ற தலைப்பில் வெளியானது .
· ராமானுஜர் மேற்கல்வி பெற , உதவிக்கு கடிதம் அனுப்பியது ஹார்டி என்பவருக்கு . இதற்கு ராமானுஜத்திற்கு உதவியவர் – E.H. நெவில் .
· ராமானுஜர் இங்கிலாந்து புறப்பட்ட தேதி – 17.03.1914
· ‘ஆய்லராக இல்லாவிட்டாலும் , ராமானுஜர் குறைந்த பட்சம் ஒரு ஜகோபி’ என்றவர் – லிட்டில்வுட் . (ஆய்லர் – சுவிஸ் நாட்டு கணித மேதை . ஜகோபி – ஜெர்மன் நாட்டு கணிதமேதை )
· ‘கணிதத்திறமையால் , விஞ்ஞான உலகை பிரமிக்கச்செய்து , வரலாற்றில் ஒரு குறிப்பிடத்த்கக இடத்தைப்பெற்ற ஒரு பிறவிக்கணிதமேதை ராமானுஜர்’ என்றவர் – இந்திராகாந்தி
· ‘ராமானுஜர் ஒரு முதல் தர கணிதமேதை ’ என்றவர் – ஆளுநர் லார்ட் மென்ட் .
· ’20-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை ராமானுஜர்’ என்றவர் – சூலியன் .
ஹார்டி மற்றும் லிட்டில்வுட்
· கணித இரட்டை மாமேதைகள் என்றழைக்கப்படுபவர்கள் – ஹார்டி , லிட்டில்வுட் .
· ‘ரோசர்ஸ் ராமானுஜன் கண்டுபிடிப்புகள்’ என்ற நூலை வெளியிட்டவர் – ஹார்டி .
· “இறைவன் தந்த பரிசு ராமானுஜர்” என்றவர் – E.T.பெல் .
· ராமானுஜர் இங்கிலாந்தில் பெற்ற பட்டம் FRS . ஆண்டு 1918 .
· ராமானுஜரின் வெண்கலச்சிலையை இந்தியாவிற்கு அளித்தவர்கள் – ரிச்சர்ட் , ஆஸ்கே (அமெரிக்கா) , 1984 .
· ராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் உள்ள இடம் – சென்னை .
15.நால்வகைச்சொற்கள்
· தனியாக வராமல் , பெயர் மற்றும் வினைச்சொற்களை சார்ந்து வரும் சொற்கள் – இடைச்சொல் .
· செய்யுளுக்கே உரிமை பெற்று வரும் சொற்கள் – உரிச்சொல் .
16.இரட்டுற மொழிதல்
· ஆசிரியர் – காளமேகப்புலவர்
· இயற்பெயர் – வரதன்
· ஊர் – கும்பகோணம் (அ) விழுப்புரம் என்ற கருத்து நிலவுகிறது .
· இவர் வைணவத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியவர் .
· திருவரங்க மடப்பள்ளியில் சிறிதுகாலம் வேலைப்பார்த்தவர் .
· ஆடுபரி – ஆடுகின்ற குதிரை ,
· பரிவாய் – அன்பாய் , குதிரையின் வாய்
· துன்னலர் – பகைவர் , அழகிய மலர்
· ‘தனிப்பாடல் திரட்டை தொகுத்தவர்’ – சந்திரசேகர கவிதாசப்பண்டிதர் . தொகுப்பித்தவர் – ராமநாதபுரம் பொன்னுசாமி .
· ‘கற்றது கைம்மண்ணளவு , கல்லாதது உலகளவு’ என்று பாடியவர் – ஔவை .
17.காந்தியடிகள் கடிதம்
· இக்கடிதம் , 1917 ல் குஜராத்தில் புரோச் எனும் நகரில் நடந்த , இரண்டாம் கல்வி மாநாட்டில் காந்தியடிகள் பேசியதைத் தழுவி , பாடபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது .
18.சிந்தனைச்செல்வம்
· ஆசிரியர் – திருமுருக கிருபானந்த வாரியார் .
19.இடுகுறி , காரணப்பெயர்கள்
· தமிழில் மிகுதியாக உள்ள பெயர்கள் – காரணப்பெயர்கள்
· மரங்கொத்தி – காரண சிறப்புப்பெயர்
20.திருவாரூர் நாண்மணிமாலை
· ஆசிரியர் – குமர குருபர்
· பெற்றோர் – சண்முகசிகாமணி கவிராயர் , சிவகாமசுந்தரி .
· வேறுநூல்கள் – நீதிநெறிவிளக்கம் , மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழ் , கந்தர் கலிவெண்பா , முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் , மதுரைக்கலம்பகம் ,
· காலம் – 17ம் நூற்றாண்டு .
· திருவாரூர் நாண்மணிமாலையில் உள்ள மொத்த பாடல்கள் – 40 .
· நாண்மணிமாலை – முத்து,பவளம், மரகதம்,மாணிக்கம் .
· அதேபோல் இந்நூலில் உள்ள நால்வகைப்பா – வெண்பா , ஆசிரியப்பா, கட்டளை கலித்துறை, ஆசிரியவிருத்தம் .
· தென்மலை – தெற்கிலுள்ள திருவாரூர் , பூங்கோயில் – திருவாரூர்க்கோவில் .
21.மெய்ப்பொருள் கல்வி
· ஆசிரியர் – வாணிதாசன்
· இயற்பெயர் – எத்திராசலு (அ) அரங்கசாமி .
· பெற்றோர் – திருக்காமு , துளசியம்மாள்
· சிறப்புப்பெயர் – கவிஞரேறு , பாவலர்மணி , தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த்
· ஊர் – புதுவையை அடுத்த வில்லியனூர் .
· காலம் – 22.07.1915 - 07.08.1974
· மெய்ப்பொருள் கல்வி என்பது , இவரின் குழந்தை இலக்கியம் என்ற நூலில் வரும் ஒரு பாடல் ஆகும் .
22.தூங்கா நகர்
· தூங்கா நகரம் எனப்படுவது – மதுரை
· தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய நகரம் - மதுரை
· தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றழைக்கப்படும் நகரம் - மதுரை
· ‘தமிழ்க்கெழு கூடல்’ என்று புறநானூறு பாராட்டிய நகரம் – மதுரை
· ‘தாங்கரு மரபின் மகிழ்நனை மதுரை ’ என்ற நூல் – சிறுபாணாற்றுப்படை
· ‘ஆலவாய் என்பது மதுரை’ என்ற நூல் – திருவிளையாடற்புராணம்
· மதுரையில் ஆடைகள் விற்கும் பகுதி – அறுவை வீதி
· தானியக்கடை பகுதி – கூலவீதி
· பொற்கதைகள் இருக்கும் வீதி – பொற்வீதி
· மன்னர்கள் வாழும் வீதி – மன்னவர் வீதி
· அந்தணர்கள் வாழும் வீதி – மறையவர் வீதி
· ‘சேரநாடு வேழமுடைத்து , சோழநாடு சோறுடைத்து , பாண்டிய நாடு முத்துடைத்து , தொண்டை நாடு – சான்றோர் உடைத்து ‘ என்பது பழமொழி .
· அரிமர்த்தணப்பாண்டியனிடம் அமைச்சராய் பணியாற்றியவர் – மாணிக்கவாசகர்
· குமரகுருபரர்க்கு , மீனாட்சியம்மையே சிறுபிள்ளையாக வந்து , முத்தமணிமாலை பரிசளித்தது , மதுரையில் .
· மதுரையில் 4-வது தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர் – பாண்டித்துரை
· திருஞானசம்பந்தர் , கூன்பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர் .
· மீனாட்சி கோவிலின் பழமையான கோபுரம் – கிழக்குக்கோபுரம்
· மீ.கோவில் கோபுரங்களில் உயரமானது – தெற்கு கோபுரம் (160.9 அடி , 1511 சுதை உருவம் உள்ளது )
· மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது – நாயக்கர் மஹால் (தூண்கள் 82 அடி உயரம் , 19 அடி சுற்றளவு)
24.கண்ணதாசன்
· ஊர் – சிறுகூடல் பட்டி
· காலம் – 1927 – 1981
· இயற்பெயர் – முத்தையா
· வேறுபெயர் – காரைமுத்துப்புலவர் , வணங்காமுடி , பார்வதிநாதன் , ஆரோக்கியநாதன் , கமகப்பிரியா
25. ஏர்முனை
· ‘ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமில்லை ’ எனப்பாடியவர் - மருதகாசி
· திரைக்கவித்திலகம் என அழைக்கபடுபவர் –மருதகாசி
· ஊர் – திருச்சி யில் உள்ள மேலகுடிக்காடு
· பெற்றோர் – அய்யம்பெருமாள் , மிளகாயி அம்மாள் .
· முட்டு என்பதன் பொருள் – குவியல்
· இவரின் காலம் – 13.02.1920 – 29.11.1989
26.பொங்கல் வழிபாடு
· ஆசிரியர் – ந பிச்சமூர்த்தி .
· இயற்பெயர் – ந. வேங்கடலிங்கம்
· ஊர் – கும்பகோணம் , தஞ்சை .
· காலம் – 15.08.1900 – 04.12.1976
· இவர் வழக்குரைஞராக பணியாற்றிய காலம் – 1924 -1938 (14 ஆண்டுகள்)
· கோவில் நிர்வாக அலுவலராய் இருந்த காலம் – 1938 -1954 (16 ஆண்டுகள்)
· கனகம் – பொன் , நிவேதனம் – படையமுது , கடுகி – விரைந்து .
· ‘பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவர்’ – ந.பிச்சமூர்த்தி .
27. நெசவு
· ‘பூக்களில் சிறந்த பூ , பருத்திப்பூ’ என்றவர் – திரு.வி.க
· பாவுநூல் , ஊடைநூல் இணைந்து உருவாகும் ஆடை – கலிங்கம்
· திருப்பூர் – பின்னலாடை
· மதுரை – சுங்குடிப்புடவை
· உறையூர் – கண்டங்கி
· காஞ்சி – பட்டு
· சென்னிமலை – போர்வை
சமச்சீர் புத்தகம் ஏழாம் வகுப்பு || TN 6th to 10th Text Books || Pallikalvi
28.தமிழக முன்னோடிகள்
· கண் , காது , மனம் ,இம்மூன்றிற்கும் இன்பம் பயக்கும் கலை – நாடகக்கலை
· நாடக இலக்கண நூல்கள்
1. சயிந்தம்
2. செயிற்றியம்
3. முறுவல்
4. மதிவாணன் நாடகக்கலை
· பரிதிமாற் கலைஞர் காலம் – 1870 – 1903
· ‘தமிழகம் உரிமை இழந்து , ஆங்கில மோகத்தில் ஆழ்ந்திருந்த காலத்தில் அருந்தமிழைப் போற்றி வளர்த்தவர் ’ – பரிதிமாற்கலைஞர் .
· பரிதிமாற்கலைஞரின் நாடகங்கள்
1. ரூபாவதி
2. கலாவதி
3. மானவிஜயம் (களவழி நாற்பது எனும் நூலை தழுவி எழுதப்பட்ட நாடகம்)
· செம்மாந்த சீரிய செந்தமிழ்நடையில் நாடகம் இயற்றியவர் – பரிதிமாற்கலைஞர் .
· வடமொழி , மேனாட்டு நாடகமரபுகளை , தமிழ்நாடகத்தோடு இணைந்து எழுதப்பட்ட நாடக இலக்கண நூல் – நாடகவியல் (எழுதியவர் – பரிதிமாற் கலைஞர்)
· சங்கரதாசு சுவாமிகள் காலம் – 1867 – 1920
· பாமர மக்களுக்குத்தெரிந்த பழங்கதைகளை நாடகமாக்கியவர் – சங்கரதாசு சுவாமிகள்
· சிறுவர்களை வைத்து நாடகக்குழுவை தோற்றுவித்தவர் – சங்கரதாசு
· சங்கரதாசுவின் நாடகங்கள்
1. வள்ளித்திருமணம்
2. கோவலன் சரித்தரம்
3. சதிசுலோசனா
4. இலவகுசா
5. அபிமன்யூ
6. சுந்தரி
7. பக்த பிரகலாதா
8. சதிஅனுசுயா
9. பவளக்கொடி
10. நல்லதாங்காள் (இவை உட்பட , மொத்தம் 40 நாடகங்கள்)
· ‘துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் சுவை சொட்டும் சந்தர்யம் தோய்ந்திருக்கும்’ என்றவர் – புத்தனேரி சுப்ரமணியம் .
· பம்மல் சம்பந்தனார் வாழ்ந்த காலம் – 1875 – 1964
· மாபாவி (மா – அலைமகள் , பா – கலைமகள் , வி - மலைமகள்)
· 1891-ல் , தம் 18-வது வயதில் பம்மல் சம்பந்தனார் துவங்கிய சபை – சுகுணவிலாச சபை .
· ‘நடிகர்களால் கலைஞர்’ என மதிக்கப்பட்டவர் – பம்மல் சம்பந்தனார் .
· ‘கட்டுக்குழையாத நாடகக்குழுவை வெற்றிகரமாக நடத்தியவர்’ – பம்மல்
· பம்மல் எழுதிய நாடகங்கள் – 94
1. மனோகரா
2. யயாதி
3. சிறுதொண்டன்
4. கர்ணன்
5. சபாபதி
6. பொன்விலங்கு
· ‘கேளிக்கை நாடகம் மூலம் ,நாடக நையாண்டியையும் தமிழ்நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ’ – பம்மல் .
· ஷேக்ஸ்பியரின் நாடகங்களை தமிழில் தழுவி எழுதியவர் – பம்மல் (வாணிபுரத்து வாணிகன் , விரும்பியவிதமே , அமலாதித்யன்)
· ‘சூதினும் சூதானது யாதெனின் சூதினும் சூதே சூதானது’ என்ற குரளை எழுதியவர் – பம்மல் .
· தமிழ்நாடக பேராசிரியர் –பரிதிமாற்கலைஞர்
· தமிழ்நாடகத்தலைமை ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள்
· தமிழ்நாடக உலகின் இமயமலை – சங்கரதாசு சுவாமிகள்
· தமிழ்நாடகத்தந்தை – பம்மல் சம்பந்தனார் .
மரபுச்சொற்கள்
1. தாவரங்கள்
· பிஞ்சு – அவரை , முருங்கை , கத்தரி , வெள்ளரி , கொய்யா,
· மூசு – பலா மூசு , தென்னங்குப்பை , மாவடு
2. விலங்குளின் இளமைப்பெயர்கள்
· குருவிக்குஞ்சு , கோழிக்குஞ்சு , எலிக்குஞ்சு
· ஆட்டுக்குட்டி,நாய்க்குட்டி , கழுதைக்குட்டி, பன்றிக்குட்டி , குதிரைக்குட்டி, பூனைக்குட்டி
· மான் கன்று , யானைக்கன்று , எருமைக்கன்று ,
· சிங்கக்குருளை , புலிப்பறழ் , கீரிப்பிள்ளை , அணில்பிள்ளை .
3. ஒலிமரபு சொற்கள்
· சேவல் – கூவும்
· காகம் – கரையும்
· கூகை – குழறும்
· கிளி – கொஞ்சும்
· வானம்பாடி- பாடும்
· ஆந்தை – அலறும்
· கோழி – கொக்கரிக்கும்
· குதிரை – கணைக்கும்
· சிங்கம் – முழங்கும்
· பன்றி - உருமும்
· யானை- பிளிறும்
· நரி – ஊளையிடும்
31. முக்கூடற் பள்ளு
· மதோன் மத்தர் என்பதன் பொருள் – பெரும்பித்தனாகிய சிவன் .
· முக்கூடல் எனும் ஊரின் வேறுபெயர் – ஆளூர் வடகரைநாடு
· முக்கூடலில் கூடும் ஆறுகள் - தன்பொருனை, சிற்றாறு , கோதண்டராம ஆறு .
· தென்பால் இருக்கும் நாடு – தென்பால் சீவலமங்கைத் தென்கரை நாடு
· முக்கூடற்பள்ளை எழுதியவர் - எண்ணயினாப்புலவர்
· நவரத்தினம்
1. முத்து
2. பவளம்
3. மரகதம்
4. வைடூரியம்
5. மாணிக்கம்
6. புட்பராகம்
7. ரத்தினம்
8. வைரம்
9. கோமேதகம்
32. இயற்கை வேளாண்மை
· நில இடைவெளிகள்
1. நெல் – நண்டோட
2. கரும்பு – ஏரோட
3. வாழை – வண்டியோட
4. தென்னை – தேரோட
· பஞ்சகவ்வியம் – கோமேயம் , சாணம் , பால் , தயிர் , நெய் .
· வேளாண்பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் – கோவை
· வேளாண் தொழிற்கூறுகள் – 6
34. வேற்றுமை அடைமொழி
· முதல் வேற்றுமை – எழுவாய் வேற்றுமை , 8-ம் வேற்றுமை – விளி வேற்றுமை .
· இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ
· மூன்றாம் வேற்றுமை உருபு – ஆல் ,ஆன் , ஒடு, ஓடு, உடன்
· நான்காம் வேற்றுமை உருபு – கு
· ஐந்தாம் வேற்றுமை உருபு – இல் , இன்
· ஆறாம் வேற்றுமை உருபு – அது
· ஏழாம் வேற்றுமை உருபு – கன் , மேல் , கீழ் , உள்
· தமிழ்ப்பாடநூல் என்பது இனமுள்ள அடைமொழி
· வெண்ணிலவு ,செஞ்ஞாயிறு , உப்பளம் – இனமில்லா இடைமொழி
35. தனிப்பாடல்
· ஆசிரியர் –அந்தக்கவி வீரராகவர்
· சீட்டுக்கவி மற்றும் நகைச்சுவையாய் பாடுவதில் வல்லவர் .
· இவரின் வேறு நூல்கள் –
1. சந்திரவாணன் கோவை
2. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
3. சேயூர் கலம்பகம்
4. திருக்கழுகுன்ற புராணம்
· இவரின் பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் , தொகுக்கப்பட்டுள்ளன .
· தனிப்பாடல் திரட்டில் இருக்கும் பாடல்களின் எண்ணிக்கை – 1113 , பாடியவர்கள் -110 .
· யானையைக்குறிக்கும் வேறுபெயர்கள்
1. களபம் (சந்தனம்)
2. மாதங்கம் (பெருந்தங்கம்)
3. வேழம் (பொன்)
4. பகடு (எருது)
5. கம்பம்மா (கம்புமாவு)
சமச்சீர் புத்தகம் ஏழாம் வகுப்பு || TN 6th to 10th Text Books || Pallikalvi
No comments:
Post a Comment